Breaking: ஆம்பூரில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட மண்டபத்திற்கு சீல்

பணப்பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் மக்களவை தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.இதன் பின்னர் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வேலூரில் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.வேலூர் தொகுதியில் 28 பேர் கொண்ட இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
ஆம்பூரில் இஸ்லாமிய அமைப்பினருடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார் .இந்த ஆலோசனை கூட்டமானது ஒரு தனியார் மண்டபத்தில் வைத்து நடைபெற்றது .
இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக சார்பாக போட்டியிடும் கதிர் ஆனந்தும் கலந்துகொண்டார் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது இந்த கூட்டமானது ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது.இது குறித்து புகார் எழுந்ததை அடுத்து முறையான அனுமதி பெறாமல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றதால் மண்டபத்திற்கு சீல் வைக்கப்படுவதாக குறிசீல் வைத்து சென்றுள்ளனர் .
மண்டபத்தின் மேலாளரிடம் இதில் எதற்க்காக கூட்டம் நடைபெற்றது,எத்தனை பேர் கலந்து கொண்டனர் என்று தேர்தல் அதிகாரிகள் விளக்கம் கேட்டுள்ளனர் .
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025