அமமுக சார்பில் மார்ச் 3-ஆம் தேதி முதல் விருப்ப மனுக்களை பெறலாம் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் பெற தேதியை அனைத்து கட்சிகளும் அறிவித்து வரும் நிலையில், அமமுக சார்பில் விருப்ப மனு பெற தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புபவர்கள் வருகின்ற மார்ச் 3-ஆம் தேதி புதன்கிழமை முதல் மார்ச் 10-ஆம் தேதி புதன்கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் கீழே குறிப்பிட்டுள்ளபடி விருப்பமனு கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்ப படிவத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
படிவத்தில் கேட்கப்பட்ட அனைத்து தகவல்களையும் முழுமையாக பூர்த்தி செய்து தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க கேட்டுக் கொள்கிறோம். தமிழகத்தில் விருப்ப மனுவிற்கான கட்டணத்தொகை ரூ.10,000, புதுச்சேரியில் விருப்ப மனுவிற்கான கட்டணத்தொகை ரூ.5,000 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…