நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தை அடுத்த நடுக்கோம்பையை சேர்ந்தவர் பெரியசாமி (70). இவர் பொதுப்பணித்துறையின் ஒப்பந்ததாராக உள்ளார்.
இந்நிறுவனம் மத்திய, மாநில அரசுகளிடம் கட்டுமான ஒப்பந்தம் பெற்று தமிழகத்தில் பல பகுதிகளில் கட்டுமான பணிகளை செய்து வருகிறது.
இந்நிலையில் பிஎஸ்கே குழும உரிமையாளர் பெரியசாமியின் வீடு மற்றும் அலுவலகங்களில் 3 நாளாக நடத்திய சோதனையில் ரூ.14 கோடி பணம், முக்கிய ஆவணங்கள் சிக்கியது.
மேலும் பிஎஸ்கே குழுமம் ரூ 118 கோடி வருமானத்திற்கு கணக்கு காட்டப்படாததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் தகவல்.