அகரம் அகழாய்வில் 256 செ.மீ ஆழத்தில் தொன்மை வாய்ந்த சுடுமண் முத்திரை கண்டறியப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் கீழடி அருகே உள்ள அகரம் கிராமத்தில் தொல்லியல் துறை சார்பில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் நடைபெற்ற ஆராய்ச்சியில் தொன்மையான சுடுமண் முத்திரை ஒன்று கிடைத்துள்ளது. இது குறித்து தொல்லியல் அதிகாரிகள் கூறுகையில், இந்த சுடுமண்ணால் ஆன முத்திரை 256 சென்டிமீட்டர் ஆழத்தில் இருந்து எடுக்கப்பட்டதாகவும், இந்த முத்திரையின் தலைப்பகுதி மற்றும் அடிப்பகுதி தட்டையாகவும், உடல்பகுதி உட்குழிவுள்ள உருளை வடிவம் கொண்டதாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த முத்திரையின் தலைப்பகுதியில் கீறப்பட்ட மூன்று பிரிவுகளைக் கொண்ட தடிமனான வட்ட வடிவ அலங்காரங்களுடன், அதன் நடுவே சில புள்ளிகள் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் கீழும் பக்கவாட்டிலும் தலைப் பகுதியிலும் சிறிது சேதமடைந்துள்ளதாகவும், இந்த முத்திரையின் தலைப்பகுதி நன்கு வழுவழுப்பாகவும், அடிப்பகுதி சொரசொரப்பாகவும் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
நியூ சண்டிகர் : இன்று நியூ சண்டிகர் மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில்…
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நடிகை சிட்னி ஸ்வீனி, தனது குளியல் நீரைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட சோப்புகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி தலைப்பு…
நியூ சண்டிகர் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஏற்கனவே, பெங்களூர் அணி சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டிக்கு சென்றுவிட்டது.…
சென்னை : இன்று (மே 30) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய…
சென்னை :2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் தீயை…
தூத்துக்குடி : திருச்செந்தூர் முருகன் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஜூன் 9ம் தேதி உள்ளூர் விடுமுறை…