தமிழகம் முழுவதும் நாளை முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை கல்லூரிகள், பல்கலைக் கழங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் விடுமுறையால் நாளை முதல் ஜன.1ஆம் தேதிவரை நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.இதற்கு இடையில் தமிழகத்தில் வருகின்ற 25-ம் தேதி கிறிஸ்துமஸ் தினம் மற்றும் ஜனவரி 1-ஆம் தேதி புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளனர்.
மேலும் தமிழகத்தில் பல இடங்களில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் தமிழகம் முழுவதும் நாளை முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை கல்லூரிகள், பல்கலைக்கழங்களுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
unknown nodeஇந்நிலையில் தொடர் விடுமுறையால் நாளை முதல் ஜன.1ஆம் தேதிவரை நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.