ஆர்.எஸ்.பாரதியை சிறைக்கு அனுப்ப போகிறோம்.. அண்ணாமலை பரபரப்பு பேட்டி.!

Published by
மணிகண்டன்

சென்னை: கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் தன்னை தொடர்பு படுத்தி ஆர்.எஸ்.பாரதி (திமுக) விமர்சித்ததால் அவர் மீது அண்ணாமலை (பாஜக) அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

கள்ளக்குறிச்சில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் விஷச்சாராயம் அருந்தி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த உயிரிழப்பு சம்பவம் குறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களிடம் பேசுகையில்,  கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது என விமர்சனம் செய்து இருந்தார்.

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் தன்னை தொடர்புபடுத்தி பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து 1 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதனை தொடர்ந்து இன்று சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மானநஷ்டஈடு வழக்கு பதிந்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஜூன் 23ஆம் தேதி திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர் சந்திப்பில் கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் குறித்து என்மீது அவதூறு விளைவிக்கும் வகையில் பேசினார். நான் அரசியலுக்கு வந்த 3 ஆண்டுகளில் யார் மீதும் அவதூறு வழக்கு தொடரவில்லை. ஆனால் தற்போது இவர்கள் பேசிவருவதை பார்க்கையில், வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம்.

ஆர்.எஸ்.பாரதி மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிக்கு கோரிக்கை வைத்துள்ளோம். இதனை தொடர்ந்து ஆர்.எஸ்.பாரதிக்கு நீதிமன்ற சம்மன் அனுப்பப்படும். ஆளும் கட்சியாக உள்ள திமுகவை யாரும் எதிர்ப்பது கிடையாது. ஆனால், நங்கள் திமுகவை சேர்ந்த ஆர்.எஸ்.பாரதியை இந்த வழக்கில் சிறைக்கு அனுப்ப போகிறோம்.

அவரிடம் இருந்து நஷ்டஈடு பெற்று மதுவினால் பாதிக்கப்பட்டோருக்கு மறுவாழ்வு அமைக்கப்படும் என எங்கள் வழக்கில் குறிப்பிட்டுள்ளோம். 2 ஆண்டுகளுக்கு முன்னர் ஆர்.எஸ்.பாரதி என்னை ” சின்னப்பையன்” என்று விமர்சித்தார். இந்த சின்ன பையன் இந்த வழக்கை வைத்து திமுகவையும், ஆர்.எஸ்.பாரதியையும் என்ன செய்கிறேன் என்று பாருங்கள்.

படிப்பு நாங்க போட்ட பிச்சை என்பது, பி.ஏ படித்தவர்களை நாய் என்று கூறுவது. ஆர்.எஸ்.பாரதியின் இந்த பேச்சுக்கு தான் நாங்கள் வழக்கு போட்டுள்ளோம். இந்த வழக்கை எங்கள் வழக்கறிஞர் பால் கனகராஜ் பதிவு செய்துள்ளார் என்று செய்தியாளர்களிடம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

வைகாசி திருவிழா – தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஜூன் 9ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!

தூத்துக்குடி :  திருச்செந்தூர் முருகன் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஜூன் 9ம் தேதி உள்ளூர் விடுமுறை…

1 hour ago

பாமக நிர்வாகி நீக்கம்..தலைவராக ஜோசுவா நியமனம்! ராமதாஸ் அதிரடி

செங்கல்பட்டு : 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் தீயை…

2 hours ago

என் மீது சொல்லப்பட்ட அபாண்டமான பழிகளை தட்டிவிட்டு செல்வேன் – அன்புமணி பேச்சு!

சென்னை : நேற்று விழுப்புரம் தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அன்புமணி குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.“50 ஆண்டுகளாக…

2 hours ago

“இதுக்காக தான் ரோஹித் விக்கெட்டை நான் கொண்டாடவில்லை”…மனம் திறந்த முகமது சிராஜ்!

மும்பை : பொதுவாகவே குஜராத் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் ஒரு விக்கெட் எடுத்துவிட்டார் என்றால் அந்த விக்கெட் எடுத்த குஷியை…

3 hours ago

மன்னிப்பு கேட்க முடியாது…உறுதியாக நிற்கும் கமல்! ஆதரவாக இறங்கிய தென்னிந்திய நடிகர் சங்கம்!

சென்னை : தக்லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன் உயிரே, உறவே, தமிழே’ என தொடங்கியவர் கன்னட மொழி…

3 hours ago

என் அம்மா மீது சிறு துரும்பும் பட விட மாட்டேன் – பாமக தலைவர் அன்புமணி பேச்சு!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தலைவர் அன்புமணி ராமதாஸ், தனது தந்தையும் கட்சியின் நிறுவனருமான டாக்டர் ராமதாஸ் முன்வைத்த…

4 hours ago