ஆர்.எஸ்.பாரதியை சிறைக்கு அனுப்ப போகிறோம்.. அண்ணாமலை பரபரப்பு பேட்டி.!

Published by
மணிகண்டன்

சென்னை: கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் தன்னை தொடர்பு படுத்தி ஆர்.எஸ்.பாரதி (திமுக) விமர்சித்ததால் அவர் மீது அண்ணாமலை (பாஜக) அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

கள்ளக்குறிச்சில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் விஷச்சாராயம் அருந்தி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த உயிரிழப்பு சம்பவம் குறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களிடம் பேசுகையில்,  கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது என விமர்சனம் செய்து இருந்தார்.

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் தன்னை தொடர்புபடுத்தி பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து 1 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதனை தொடர்ந்து இன்று சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மானநஷ்டஈடு வழக்கு பதிந்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஜூன் 23ஆம் தேதி திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர் சந்திப்பில் கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் குறித்து என்மீது அவதூறு விளைவிக்கும் வகையில் பேசினார். நான் அரசியலுக்கு வந்த 3 ஆண்டுகளில் யார் மீதும் அவதூறு வழக்கு தொடரவில்லை. ஆனால் தற்போது இவர்கள் பேசிவருவதை பார்க்கையில், வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம்.

ஆர்.எஸ்.பாரதி மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிக்கு கோரிக்கை வைத்துள்ளோம். இதனை தொடர்ந்து ஆர்.எஸ்.பாரதிக்கு நீதிமன்ற சம்மன் அனுப்பப்படும். ஆளும் கட்சியாக உள்ள திமுகவை யாரும் எதிர்ப்பது கிடையாது. ஆனால், நங்கள் திமுகவை சேர்ந்த ஆர்.எஸ்.பாரதியை இந்த வழக்கில் சிறைக்கு அனுப்ப போகிறோம்.

அவரிடம் இருந்து நஷ்டஈடு பெற்று மதுவினால் பாதிக்கப்பட்டோருக்கு மறுவாழ்வு அமைக்கப்படும் என எங்கள் வழக்கில் குறிப்பிட்டுள்ளோம். 2 ஆண்டுகளுக்கு முன்னர் ஆர்.எஸ்.பாரதி என்னை ” சின்னப்பையன்” என்று விமர்சித்தார். இந்த சின்ன பையன் இந்த வழக்கை வைத்து திமுகவையும், ஆர்.எஸ்.பாரதியையும் என்ன செய்கிறேன் என்று பாருங்கள்.

படிப்பு நாங்க போட்ட பிச்சை என்பது, பி.ஏ படித்தவர்களை நாய் என்று கூறுவது. ஆர்.எஸ்.பாரதியின் இந்த பேச்சுக்கு தான் நாங்கள் வழக்கு போட்டுள்ளோம். இந்த வழக்கை எங்கள் வழக்கறிஞர் பால் கனகராஜ் பதிவு செய்துள்ளார் என்று செய்தியாளர்களிடம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

Recent Posts

அன்புமணி நடைப்பயணத்துக்கு தடை கோரி ராமதாஸ் மீண்டும் மனு.!

சென்னை : உரிமை மீட்க தலைமுறை காக்க நடைப்பயணம் என்ற பிரச்சார பயணத்தை ஜூலை 25ல் அன்புமணி தொடங்கினார். ஆனால்,…

5 hours ago

கேரள கன்னியாஸ்திரிகள் மீது ஆள்கடத்தல், கட்டாய மதமாற்ற வழக்குப்பதிவு – மு.க.ஸ்டாலின் கண்டனம்.!

கேரளா : சத்தீஸ்கரில் இரண்டு மலையாள கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிரோ மலபார் திருச்சபை இதைக் கண்டித்து…

5 hours ago

நாய்-க்கு இருப்பிடச் சான்றிதழ்.., வினோத சம்பவத்தால் பீகாரில் எழுந்தது சர்ச்சை.!

பாட்னா : பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள மசௌர்ஹி பகுதியில், " நாய் பாபு, S/o, குட்டா பாபு'' என்ற…

6 hours ago

நெல்லை அருகே நடந்த ஆணவக் கொலையில் கைதான இளைஞரின் புகைப்படம் வெளியீடு.!

நெல்லை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 படுகொலை சம்பங்கள் அரங்கேறியுள்ளன. நெல்லை, மதுரை, சென்னை, ஈரோடு…

7 hours ago

“சிவகாசி தொகுதியில்தான் போட்டியிடுவேன்” – கண்ணீர் மல்க சூளுரைத்த ராஜேந்திர பாலாஜி.!

சிவகாசி : முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 2026…

7 hours ago

பாஜக, திமுக நாடகத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள் – விஜய் அறிக்கை.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் ஏற்க…

8 hours ago