டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் நாளை நடைபெறும் ஆலோசனைக்கு பின் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசின் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான இடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை நடத்தி தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்த தேர்வுகள் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதல் நடத்தப்படாமல் உள்ளது.
கொரோனா கட்டுக்குள் வந்துள்ள நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை படிப்படியாக இயல்புநிலைக்கு திரும்பி வருகிறது. எனவே காலிப் பணியிடங்களுக்கான தேர்வை நடத்த அரசு பணியாளர் தேர்வாணையம் முடிவு செய்துள்ள நிலையில், இது தொடர்பாக நாளை அரசு பணியாளர் தேர்வாணையம் ஆலோசனை நடத்த உள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர், செயலாளர், தேர்வு கட்டுப்பாட்டு துறை அலுவலர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர். கூட்டத்தில் குரூப் 2, குரூப் 2ஏ, குரூப் 4 ஆகிய முக்கிய தேர்வுகளை எப்போது நடத்துவது என்பது தொடர்பான ஆலோசனைகள் மேற்கொள்ள இருப்பதாகவும், இந்த தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் இந்த ஆலோசனைக்கு பின் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…