மத்திய ஆசிரியர் சிடெட்( CTET) தேர்வுக்கான விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடக்கம்.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • சிபிஎஸ்இ, நவோதயா போன்ற மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றுவதற்கு CTET (Central Teacher Eligibility Test) நடத்தப்படுகிறது.
  • இதற்கான விண்ணப்பப்பதிவு இன்று முதல் தொடங்குகிறது. CTET தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆர்வமும், தகுதியும் உள்ள பட்டதாரிகள், விண்ணப்பிக்கலாம்.

தமிழக பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றுவதற்கு டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். அதேபோல், சிபிஎஸ்இ, நவோதயா போன்ற மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றுவதற்கு CTET (Central Teacher Eligibility Test) நடத்தப்படுகிறது. இது வரும் ஜூலை மாதம் சிடெட் தேர்வு நடைபெறுகிறது.

இதற்கான விண்ணப்பப்பதிவு இன்று முதல் தொடங்குகிறது. CTET தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆர்வமும், தகுதியும் உள்ள பட்டதாரிகள், https://ctet.nic.in/webinfo/Public/Home.aspx என்ற இணையதளம் மூலம் பிப்ரவரி 24-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். CTET 2020 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 24 என்றும், விண்ணப்பக் கட்டணத்தை பிப்ரவரி 27-க்குள் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய நாட்கள்:
விண்ணப்பப் பதிவு தொடங்கிய நாள் : 24 ஜனவரி 2020
விண்ணப்பப் பதிவு முடியும் நாள் : 24 பிப்ரவரி 2020
விண்ணப்பக்கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் : 27 பிப்ரவரி 2020
தேர்வு நடைபெறும் நாள் : 5 ஜூலை 2020

இந்நிலையில், மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி ஆசிரியர் பணியில் சேர சி.பி.எஸ்.இ.யால் ஆண்டுதோறும் நடத்தப்படும் சிடெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இடைநிலை ஆசிரியர் பணிக்கு முதல்தாள் தேர்வும், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 2-ம் தாள் தேர்வும் நடத்தப்படுகிறது. மேலும், சிடெட் தேர்வு மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு ஜூலை 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இதை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

14 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

15 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

15 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

16 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

16 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

18 hours ago