அயோத்தியா மண்டபம் – மிரட்டல் விடுத்த ஒருவர் கைது!

Published by
பாலா கலியமூர்த்தி

அயோத்தியா மண்டபம் தொடர்பாக சமையல் ஒப்பந்ததாரர் மகேஷ் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது.

அயோத்தியா மண்டபம் விவகாரத்தில் ரூ.100 கோடி மோசடியை அம்பலப்படுத்திய சமூக ஆர்வலர் ரமணிக்கு மிரட்டல் விடுத்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நங்கநல்லூரை சேர்ந்த சமையல் ஒப்பந்ததாரர் மகேஷ் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தது காவல்துறை. மிரட்டல், இரு பிரிவினரின் இடையே பகைமையை உருவாக்கும் வகையில் பேசுதல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அயோத்தியா மண்டபத்தை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என ரமணி கோரிக்கை விடுத்திருந்தார். கடந்த 1954-ம் ஆண்டு, ஸ்ரீ ராம் சமாஜ் அமைப்பின் மூலம் சென்னை மேற்கு மாம்பலத்தில் அயோத்தியா மண்டபம் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

மாணவர்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி.., தடுத்து நிறுத்திய காவல்துறை..!

மாணவர்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி.., தடுத்து நிறுத்திய காவல்துறை..!

பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…

28 minutes ago

உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!

டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…

54 minutes ago

இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!

ஸ்ரீநகர் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…

1 hour ago

“அவர் பொறுப்பாக நடந்திருக்க வேண்டும்”- பாஜக அமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்.!

டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…

2 hours ago

உதகை மலர் கண்காட்சி தொடக்கம்: மலர் சிம்மாசனத்தில் அமர்ந்த முதல்வர் ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…

2 hours ago

காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்..குழந்தைகள் உள்பட 84 பேர் பலி!

காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…

3 hours ago