அயோத்தியா மண்டபம் தொடர்பாக சமையல் ஒப்பந்ததாரர் மகேஷ் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது.
அயோத்தியா மண்டபம் விவகாரத்தில் ரூ.100 கோடி மோசடியை அம்பலப்படுத்திய சமூக ஆர்வலர் ரமணிக்கு மிரட்டல் விடுத்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நங்கநல்லூரை சேர்ந்த சமையல் ஒப்பந்ததாரர் மகேஷ் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தது காவல்துறை. மிரட்டல், இரு பிரிவினரின் இடையே பகைமையை உருவாக்கும் வகையில் பேசுதல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அயோத்தியா மண்டபத்தை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என ரமணி கோரிக்கை விடுத்திருந்தார். கடந்த 1954-ம் ஆண்டு, ஸ்ரீ ராம் சமாஜ் அமைப்பின் மூலம் சென்னை மேற்கு மாம்பலத்தில் அயோத்தியா மண்டபம் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…