‘இனிமேல் குடிக்க மாட்டேன்’ என பிரமாண பாத்திரம் தாக்கல் செய்தால் ஜாமீன்.
திருச்சியை சேர்ந்த சிவா, கார்த்திக் இருவரும், உயர்நீதிமன்ற மதுரை கிளையில், ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், ‘கடந்த ஜூலை 25 ஆம் தேதி நண்பர்கள் சுரேஷ், பாண்டியன் உள்ளிட்டோர் உடன் இணைந்து மது அருந்திய போது வாய் தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து பீர் பாட்டிலால் சுரேசை தாக்கியதாக எங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கானது பொய்யாக பதிவு செய்யப்பட்டதாகவும், கணக்கு காண்பிக்கும் நோக்கி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்றும், 30 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருக்கும் நிலையில் கீழமை நீதிமன்றத்தில் ஜாமீன் கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எனவே, நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு நடக்கிறோம். இந்த வழக்கில் எங்களுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி மது அருந்தியதால் தான், இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது. எனவே மனுதாரர்கள் இருவரும் இனிமேல் குடிக்க மாட்டோம் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்தால் ஜாமீன் வழங்குவதாக கூறி இந்த வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…