முன்னாள் முதல்வர் கருணாநிதி , கனிமொழி பற்றி அவதூறு கருத்து.! பாஜக நிர்வாகி கைது.!

VAT Kalivaradhan

முன்னாள் முதல்வர் கருணாநிதி , கனிமொழி பற்றி அவதூறு கருத்து பேசியதாக பாஜக நிர்வாகி விஏடி.கலிவரதன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்து பாஜக சார்பில் நேற்று பல்வேறு இடங்களில் ஆளும் கட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் அப்பகுதி தெற்கு மாவட்ட தலைவர் விஏடி கலிவரதன் தலைமையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

அப்போது தெற்கு மாவட்ட தலைவர் விஏடி கலிவரதன் கண்டன உரை நிகழ்திய போது, மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி மற்றும் தற்போதைய திமுக எம்பி கனிமொழி பற்றியும் அவதூறு விளைவிக்கும் விதமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் இவரது பெயரில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு இருந்ததுள்ளது.

இந்த புகாரின் பெயரில், நேற்று நள்ளிரவு விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் விஏடி.கலிவரதன் காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். தற்போது அவரிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்