பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தான் பாஜக அரசு உருவாக்கியுள்ளது- எம்.பி கனிமொழி பேச்சு.!

மணிப்பூரில் வன்முறையைத் தடுக்க பாஜக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என திமுக எம்.பி கனிமொழி பேச்சு.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மத்திய பாஜக அரசை கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திமுக துணை பொதுச்செயலாளரும், எம். பி யுமான கனிமொழி, மணிப்பூரில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, இப்படிப்பட்ட பாதுகாப்பு இல்லாத நிலையை தான் பாஜக அரசு உருவாக்கியுள்ளது.
மணிப்ரில் கலவரங்கள் கட்டுக்கடங்காமல் எல்லை மீறி நடைபெற்று கொண்டிருக்க, உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்ட பிறகே பிரதமர் மோடி வை திறந்து பேசுகிறார், இப்படிப்பட்ட ஆட்சி தேவை தானா என அவர் மேலும் கூறினார். உலகத்தையே உலுக்கும் அளவுக்கு மணிப்பூரில் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது.
ஆனால் பிரதமர் வெளிநாடு சென்று கொண்டிருக்கிறார், இதைப்பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அப்பாவி பெண்கள் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்க, பிரதமர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என கனிமொழி மேலும் கூறினார்.