#BREAKING : அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான முறைகேடு புகார்..! விசாரணை நிறைவு…!

Default Image

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான முறைகேடு புகார் தொடர்பான விசாரணை நிறைவு.

கடந்த 2018-ஆம் ஆண்டு, அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சூரப்பா  நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் அண்ணா பல்கலைக்கழகத்தில் பணி நியமனம், பதவி உயர்வு வழங்குதல் உள்ளிட்ட பணிகளில் 200 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக தமிழக உயர்கல்வித்துறைக்கு புகார்கள் அளிக்கப்பட்டது.

சூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. சூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டை கலையரசன் தலைமையில் ஆணையம் விசாரணை நடத்தி வந்தது.

இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒரு மாதமாக விசாரணை நடைபெறாமல் இருந்த நிலையில், திங்கட்கிழமை முதல் இது தொடர்பான விசாரணை மீண்டும் தொடங்கியது. இதனையடுத்து, முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான முறைகேடு புகார்கள் குறித்த விசாரணையை நீதிபதி கலையரசன் நிறைவு செய்துள்ளார். இதனை தொடர்ந்து, விரைவில், இந்த விசாரணை தொடர்பான அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்பிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

eps - mk stalin
DMK - Ajithkumar
Ajith Kumar TN Govt
elon musk vs Trump
Ajith Kumar Case - Siva Gangai