சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் அண்ணா பல்கலைக்கழகமானது தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான பொறியியல் கல்லூரிகளை வழிநடத்தி வருகிறது. இந்த அண்ணா பல்கலை கழகத்தை இரண்டாக பிரிக்க தமிழக அரசு ஆலோசனையில் இருந்தது. அதற்கான முயற்சியில் சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், செங்கோட்டையன், தங்கமணி, ஜெயக்குமார் ஆகியோர் அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதற்காக ஆலோசனை நடத்தி வருகின்றனர் எனவும், விரைவில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பது உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது. பின்னர் பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பது குறித்து தொடர்பாக 5 அமைச்சர்கள் கொண்ட குழுவில் முடிவெடுக்கப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், இரண்டாக பிரிப்பதால் ஏற்படும் நிதி சிக்கலை தீர்க்க குழு ஒன்று அமைக்கவும் முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து 5 பேர் கொண்ட அமைச்சரவை குழுவினர் நேற்று தலைமை செயலருடன் ஆலோசனை நடத்தினார்கள் என தகவல் தெரிவிக்கப்படுகிறது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…