#Breaking:பிரபல ரவுடி கட்டை ராஜாவுக்கு தூக்கு தண்டனை – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பல்வேறு கொலை வழக்கில் சிறையில் உள்ள தஞ்சையை சேர்ந்த பிரபல ரவுடி கட்டை ராஜாவுக்கு தூக்கு தண்டனை விதித்து கும்பகோணம் அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ரவுடி ராஜா என்கிற கட்டை ராஜா மீது கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் மற்றும் பல்வேறு கொள்ளை வழக்குகள் உள்ளன.அந்த வகையில்,கடந்த 2013 ஆம் ஆண்டு செந்தில்நாதன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கும்பகோணம் தாலுகா காவல்நிலையத்தில் ரவுடி ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில்,செந்தில்நாதன் கொலை வழக்கில் ராஜாவுக்கு தூக்கு தண்டனை விதித்து கும்பகோணம் அமர்வு நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.மேலும்,இவ்வழக்கில் மற்றொரு குற்றவாளி செல்வத்திற்கு ஆயுள் தண்டனையுடன்,ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025