#Breaking:ஈபிஎஸ் – முன்னாள் உதவியாளரின் நண்பர் கைது!

Published by
Edison

சேலம்:அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.1.37 கோடி பணமோசடி புகாரில்,ஈபிஎஸ் அவர்களின் முன்னாள் தனி உதவியாளர் மணியின் நெருங்கிய நண்பர் செல்வகுமாரை இன்று சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம்,ஓமலூர் தின்னப்பட்டி அடுத்த பூசாரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணி.இவர் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் 10 ஆண்டுகால தனி உதவியாளராக இருந்து வந்தவர்.

இந்த நிலையில்,அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி,பணமோசடி செய்ததாக நெய்வேலியினைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்திருந்தார்.இதனைத் தொடர்ந்து,முன்ஜாமீன் கோரிய மணியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

அதன்பின்னர்,பணமோசடி செய்த புகாரில் மணியை,கடந்த நவம்பர் மாத இறுதியில் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில்,அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1.37 கோடி பணமோசடியில் ஈடுபட்ட அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் அவர்களின் முன்னாள் உதவியாளர் மணியின் நண்பர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.3 மாதங்களுக்கு மேல் தலைமறைவாக இருந்து வந்த செல்வக்குமாரை சேலம் மாவட்டம் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

5 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

6 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

7 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

7 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

9 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

11 hours ago