Breaking:கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை ..!

வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதலே தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. கடலோர மாவட்டங்கள் ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தஞ்சாவூர் , திருவாரூர் ,புதுக்கோட்டைமற்றும் நெல்லை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் நாளை மற்றும் நாளை மறுநாள் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் , சென்னையில் அடுத்த இரண்டு நாள்களுக்கு மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது .
அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை சுற்றி உள்ள இந்திய பெருங்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் இதன் காரணமாக தென் தமிழகத்தில் கனமழை வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
இந்நிலையில் இன்று அதிகாலையில் இருந்து சில பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்து உள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025