#BREAKING: ரசாயனம் கலந்த விநாயகர் சிலைகள் தயாரிக்கத் தடை..! உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.!

madurai high court

விநாயகர் சதுர்த்தி வரும் செப்டம்பர் 19ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அப்பொழுது சிறியது முதல் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை தயார் செய்து, அதனை கடல், குளம் போன்ற நீர் நிலைகளில் கரைப்பார்கள். அவ்வாறு கரைப்பதற்காக தயார் செய்யப்படும் விநாயகர் சிலைகள் ரசாயன கலவைகளால் தயாரிக்கப்படுகிறது.

அதனால் நீர் நிலைகள் மாசடைகின்றன. எனவே ரசாயனம் கலந்த விநாயகர் சிலைகள் தயாரிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளைகள் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா மற்றும் நீதிபதி குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

இந்த விசாரணையில் இந்த வழக்கில் ரசாயனக் கலப்படம் இல்லாத விநாயகர் சிலைகளை மட்டுமே செய்ய வேண்டும். ரசாயனம் கலப்படம் இருக்கக்கூடிய சிலைகளை ஆறு குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளில் கரைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மேலும், மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் பசுமை தீர்ப்பாயத்தின் விதிமுறைகளை முழுமையாக பின்பற்றி விநாயகர் சிலைகளை தயாரிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Harry Brook and Jamie Smith partnership
student -10th mark
tvk manimaran
Harry Brook - Jamie Smith
vijay - chennai hc
Dog Bite Rabies