#BREAKING: ரூ.1,600 கோடி முதலீடு – முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து!

Published by
பாலா கலியமூர்த்தி

ஐக்கிய அரபு அமீரகம் முதலீட்டாளர்கள் – முதலமைச்சர் சந்திப்பு நிகழ்ச்சியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. 

சர்வதேச முதலீடுகளை தமிழ்நாட்டுக்கு ஈர்க்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் ஐக்கிய அரபு அமீரக முதலீட்டாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், தமிழ்நாட்டில் புதிய தொழில்களை தொடங்க அந்நிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் தலைமையில் கையெழுத்தாகியுள்ளது. அதன்படி, ஐக்கிய அரபு அமீரகம் – தமிழ்நாடு இடையே ரூ.1,600 கோடி முதலீட்டுக்கு 3 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.  நோபல் குழுமம் சார்பில் ரூ.1000 கோடி முதலீட்டில் எஃகு தொழிற்சாலை அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதனைத்தொடர்ந்து, முதலீட்டாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு – துபாய் இடையே பொருளாதார உறவை மேம்படுத்தவே நான் இங்கு வந்துள்ளேன். தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் இன்று 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.

தமிழ்நாட்டிற்கும் – துபாய்க்குமான பிணைப்பு ஏற்கனவே உணர்வுப்பூர்வமாக உள்ளது. வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் மாநிலமான எங்களுடன் சேர்ந்து ஒன்றாக வளர்வதற்கு அழைப்புவிடுக்கிறேன். வாருங்கள் ஒன்றாக பயணிப்போம்.

தமிழர்களின் கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி, ஐக்கிய அரபு நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பு அளித்து வருவது அனைவரும் அறிந்த உண்மை. துபாயை வெளிநாடாக நினைக்கமுடியாத அளவுக்கு தமிழர்கள் அதிகம் வாழ்கின்றனர் என தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் சுற்றுலா, விருந்தோம்பல் துறைகளில் எண்ணற்ற வாய்ப்புகள் உள்ளன. எண்ணற்ற உலகளாவிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில்களை அமைத்துள்ளன. தொழில் புரிவதற்கும், முதலீடு செய்வதற்கும் தமிழகத்தின் கதவு எப்போதும் திறந்திருக்கும் என முதலீட்டாளர்களுக்கு முதல்வர் அழைப்பு விடுத்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

போர் நிறுத்தம் அமெரிக்காவுக்கு தொடர்பு இல்லை..மீண்டும் விளக்கம் கொடுத்த அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்!

போர் நிறுத்தம் அமெரிக்காவுக்கு தொடர்பு இல்லை..மீண்டும் விளக்கம் கொடுத்த அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர்…

23 minutes ago

நீங்க இல்லைனா என்ன நான் இருக்கேன்…சர்ச்சை கொண்டாட்டத்தை செய்த ஆகாஷ் சிங்!

அகமதாபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தொடரின் 64-வது போட்டி நேற்று நரேந்திர மோடி…

56 minutes ago

கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் தகவல்!

சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 2-3 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…

2 hours ago

மாணவர்களே ஜூன் 2 பள்ளிகள் திறப்பு! முன்னேற்பாடு செய்ய உத்தரவிட்ட பள்ளிக்கல்வித்துறை!

சென்னை : தமிழ்நாட்டில் 2025-2026 கல்வியாண்டிற்காக அரசு, அரசு உதவி பெறும், மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 2, 2025 அன்று…

2 hours ago

“உங்க ரத்தம் கேமரா முன் மட்டும் ஏன் கொதிக்கிறது?” -பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி!

ராஜஸ்தான் : நேற்று தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி ராஜஸ்தான் பிகானரில் இருந்து காணொளி மூலம்…

2 hours ago

கட்டுப்பாட்டை இழந்த கார்…விபத்தில் உயிரிழந்த திண்டுக்கல் சீனிவாசனின் பேத்தி!

கோவை : மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில், அதிமுக முன்னாள் அமைச்சரும், கட்சியின் பொருளாளருமான திண்டுக்கல்…

3 hours ago