7 பேர் விடுதலை தொடர்பான கோப்புகள் அனைத்தும் குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளன என தமிழக அரசு தகவல்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பான கோப்புகள் அனைத்தும் குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளன என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஆளுநரிடம் இருந்து ஜனவரி 27-ஆம் தேதி குடியரசு தலைவருக்கு கோப்புகள் அனுப்பப்பட்டதாக தமிழக அரசு கூறியுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், முருகன், நளினி, ராபர்ட் பயாஸ், சாந்தன், ரவி, ஜெயக்குமார் ஆகிய பேரின் விடுதலை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
ரவிச்சந்திரன் என்பவர் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வழக்கு தொடுத்திருந்தார். இதற்கிடையில் நளினி, தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கொண்ட அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, 7 பேரின் கோப்புகள் ஆளுநருக்கு அனுப்பப்பட்டதா அல்லது ஜாமீன் பெற்றுள்ள பேரறிவாளன் வழக்கு மட்டும் அனுப்பப்பட்டதா என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
7 பேர் விடுதலை தொடர்பான கோப்புகள் அனைத்தும் குடியரசு தலைவருக்கு அனுப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்த நிலையில், எந்த தேதியில் அனுப்பட்டது என தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் இதுதொடர்பாக அரசு தரப்பு வழக்கறிஞர் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி, கோப்புகள் அனைத்தும் ஜனவரி 27-ஆம் தேதி குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டதாக தகவல் தெரிவித்துள்ளார்.
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…