#BREAKING: 7 நாள்களுக்கு பிறகு குடிநீர் ஆலைகளின் ஸ்டிரைக் வாபஸ்..!

தமிழகத்தில் கடந்த  7 நாள்களாக  நீடித்து வந்த குடிநீர் ஆலைகளின்  வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

தமிழகத்தில் கடந்த  7 நாள்களாக  நீடித்து வந்த குடிநீர் ஆலைகளின்  வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

தமிழகத்தில் சட்டவிரோதமாக இயங்கி வரும் குடிநீர் ஆலைகளை மூடக்கோரி சிவமுத்து என்பது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம்  சட்டவிரோதமாக இயங்கும் அனைத்து ஆலைகளை மூட  அனைத்து மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பெயரில் மாவட்ட ஆட்சியர்கள் சட்டவிரோதமாக இயங்கி வந்த குடிநீர் ஆலைகளை சீல் வைத்தனர். இதையெடுத்து தமிழகம் முழுவதும் கடந்த 7 நாள்களாக  குடிநீர் ஆலைகளின்  வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

சற்று நேரத்திற்கு முன் இன்று இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் சீல் வைக்கப்பட்ட குடிநீர் ஆலைகள் உரிமம் கோரி புதியதாக விண்ணப்பங்களை விண்ணப்பிக்கவும் அதனை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் குடிநீர் ஆலைகளின் கடந்த 7 நாள்களுக்கு நடத்திவந்த   வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறப்பட்டது.