#Breaking : புயல் பாதிப்பு குறித்து பார்வையிட கடலூர் செல்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி!

Tamil Nadu Chief Minister Edappadi Palanisamy will leave for Cuddalore at 2.30 pm today to inspect the storm damage.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக கடலூர் இன்று பிற்பகல் 2:30 மணியளவில் செல்லவுள்ளார்.

வங்க கடலில் நிலைகொண்டிருந்த நிவர் புயலானது, கரையை கடந்துள்ள நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில், பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வந்தது. அந்த வகையில், கடலூரில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருவதால், சாலைகள் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக கடலூர் செல்லவுள்ளார். மேலும், இன்று பிற்பகல் 2:30 மணியளவில் கடலூர் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.