#BREAKING: நாளை புரெவி புயலாக வலுப்பெறும்- வானிலை ஆய்வு மையம்..!

distance of 975 km, Purevi will be a deep depression this evening and will strengthen into a storm tomorrow morning, said Puviarasan today

செய்தியாளர்களிம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன், 975 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள புரெவி இன்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை காலை புயலாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் வருகின்ற 2-ஆம் தேதி மாலை இலங்கையைக் கடந்து குமாரி கடற்கரைக்கு நகரக் கூடும்.

இதனால், நாளை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை இராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய அதி கனமழையும்,  2-ஆம் தேதி தென்காசி இராமநாதபுரம் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு இடைவெளி இடியுடன் கூடிய  அதி கனமழையும், புதுக்கோட்டை சிவகங்கை, விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும் இந்த பகுதிகளில் சூறாவளி காற்று 45 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும்.

வருகின்ற 3-ஆம் தேதி தென்காசி, தூத்துக்குடி,  திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய அதி கனமழையும், சிவகங்கை, ராமநாதபுரம் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என  புவியரசன் தெரிவித்தார். மேலும், மீனவர்கள் அடுத்த 3 நாட்களுக்கு தெற்கு வங்கக்கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் தெரிவித்தார்.