#breaking: மண் சரிவில் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளர் ஒருவர் உயிரிழப்பு!

A worker was killed in a landslide while digging a ditch in Washermenpet, Chennai.

சென்னை வண்ணாரப்பேட்டையில் பள்ளம் தோண்டியபோது மண்சரிவில் சிக்கிய தொழிலாளர் ஒருவர் உயிரிழப்பு.

சென்னை வண்ணாரப்பேட்டையில் புதிதாக கண் மருத்துவமனை கட்டுவதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கட்டிடத்தின் பின்புறத்தில் மழைநீர் சேகரிப்புத் தொட்டி அமைக்க குழி தோண்டும் பணியில் 5 பேர் ஈடுபட்டனர். அப்போது திடீரென்று மண் சரிந்ததில் விழுப்புரத்தை சேர்ந்த வீரப்பன், ஆகாஷ் மற்றும் சின்னத்துரை ஆகியோர் மண்ணுக்குள் சிக்கிக் கொண்டனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், ஆகாஷையும், வீரப்பனையும் உயிருடன் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனை அனுப்பிவைத்தனர். இவர்களை தொடர்ந்து மனிசரிவில் சிக்கிய சின்னத்துரையை மீட்கும் பணி 2 மணி நேரமாக நடைபெற்ற நிலையில், அவரையும் மீட்டனர்.

இந்த நிலையில் மீட்கப்பட்ட தொழிலாளர் சின்னத்துரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், பரிதாபமாக உயிரிழந்தார். 15 அடி ஆழத்தில் மண்சரிவில் சிக்கிய தொழிலாளர்கள் ஆகாஷ், வீரப்பன் ஆகியோர் உயிருடன் மீட்ட நிலையில், மற்றொரு தொழிலாளர் சின்னத்துரை உயிரிழந்தார். சுமார் 3 மணிநேர போராட்டத்திற்கு பிறகு மூன்று பேரையும் மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.