மேல்சிகிச்சைக்காக பெங்களூர் அழைத்து செல்லப்பட்ட கேப்டன் வருண் சிங் ...!

Captain Varun Singh has been taken to Bangalore for further treatment.

மேல் சிகிச்சைக்காககேப்டன் வருண் சிங் பெங்களூர் ராணுவ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியதில், விமானத்தில் பயணம் செய்த 14 பேரில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விமானத்தில் பயணித்த கேப்டன் வருண் சிங் மட்டும் 80 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

கேப்டன் வருண் சிங்கிற்கு வெண்டிலேட்டர் மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது மேல்சிகிச்சைக்காக கேப்டன் வருண் சிங் பெங்களூர் ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இவருடன் சில மருத்துவர்களும் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.