கணவரை பார்த்துவிட்டு வீட்டுக்கு திரும்பிய போது கார் மோதி 4 மாத கர்ப்பிணி பலியாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையிலுள்ள வில்லிவாக்கம் ரங்கதாஸ் காலனியை சேர்ந்தவர்கள் தான் அசாருதீன் – கௌஷிவி தம்பதிகள். நான்கு மாத கர்ப்பிணியான கௌஷிவிக்கு ஏற்கனவே ஒன்றரை வயதில் மகன் ஒருவன் உள்ளான். துணிக்கடை ஒன்றில் அசாருதீன் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கௌஷிவி ஸ்கேன் எடுத்துவிட்டு, அந்த ரிப்போர்ட்டை வேலை பார்த்து கொண்டிருக்கும் தனது கணவரிடம் கட்டுவதற்காக துணிக்கடைக்கு சென்றுள்ளார்.
அதன் பின் சாலையில் நடந்து வீட்டுக்கு திரும்பி வந்துகொண்டிருந்த கௌஷிவி மீது வேகமாக வந்த கார் மோதியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே கர்ப்பிணி கௌஷிவி துடிதுடித்து உயிரிழந்துள்ளார். விபத்து ஏற்படுத்திய காரில் இருந்து இறங்கிய பெண் ஆட்டோவில் ஏறி தப்பி சென்றுள்ளார், அந்த காரும் வருமான வரித்துறையினருக்கு சொந்தமானது என கூறப்படுகிறது. தற்பொழுது கௌஷிவி உடலை போலீசார் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதுடன், தப்பியோடிய காரின் உரிமையாளர்களையும் தேடி வருகின்றனர்.
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…
சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை,…
சென்னை : இன்று திராவிட முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா…
கோழிக்கோடு : கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் நேற்று அவசர சிகிச்சை பிரிவு…