இபிஎஸ்-க்கு எதிரான வழக்கு – விரிவான விசாரணைக்கு சேலம் நீதிமன்றம் உத்தரவு!

Edappadi K Palaniswami

சொத்து விபரங்களை மறைத்ததாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கில் விரிவான வ்விசாரணை நடத்த உத்தரவு.

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் தாக்கல் செய்யும்போது எடப்பாடி பழனிசாமி பிராமண பத்திரத்தில் சொத்து விபரங்களை மறைத்ததாக வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், விரிவான விசாரணை நடத்த குற்றப்பிரிவு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக 30 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும், மனுதாரரான திமுக நிர்வாகி மிலானிக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் குற்றப்பிரிவு காவல்துறைக்கு, சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். தேனி மாவட்ட முன்னாள் திமுக இளைஞரணி அமைப்பாளர் பி.மிலானி தொடர்ந்த வழக்கில் சேலம் சிறப்பு நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்