மீனவர்களை விடுவிக்க உத்தரவிட கோரி வழக்கு!

Published by
பாலா கலியமூர்த்தி

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு.

கடந்த சில தினங்களுக்கு முன்பு எல்லைதாண்டி மீன் பிடித்ததாக நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 68 பேரை இலங்கை கடற்படை கைது செய்து, அவர்களின் 10 படகுகளையும் பறிமுதல் செய்தது. இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் யாழ்பாணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க உத்தரவிடக்கோரி முதல்வர் முக ஸ்டாலின் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தார். அதுமட்டுமில்லாமல் தமிழக மீனவர்கள் கைது குறித்து அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் மீது கிருமிநாசினி தெளித்து மனித உரிமை மீறலை இலக்கை கடற்படை அரங்கேற்றியுள்ளது என்று மனுதாரர் தெரிவித்துள்ளார். ராமநாதபுரத்தை சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகனின் மனுவை விரைவில் உயர்நீதிமன்றம் மதுரை கிளை விசாரிக்க உள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

இல்லாத சார்களை உருவாக்கி இழிவான அரசியல்! எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி!

இல்லாத சார்களை உருவாக்கி இழிவான அரசியல்! எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி!

சென்னை : கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம்…

1 hour ago

ஞானசேகரனுக்கு தூக்கு தண்டனை கொடுத்திருக்கலாம்! தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு!

சென்னை : கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம்…

3 hours ago

அண்ணா பல்கலை பாலியல் வழக்கு – ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை!

சென்னை : கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம்…

3 hours ago

வானிலை அலர்ட்! பகலில் வெயில் சுட்டெரித்தாலும், இரவில் கனமழை வெளுக்கும்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி,…

5 hours ago

‘புதின் போருக்கு தயாராகிறார்’…பேச்சுவார்த்தைக்கு முன் எச்சரிக்கை விட்ட அமெரிக்கா!

ரஷ்யாவும் உக்ரைனும் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இன்று, ஜூன் 2, 2025 அன்று இரண்டாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடத்த…

6 hours ago

நார்வே செஸ் : உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய குகேஷ்!

நார்வே : செஸ் தொடர் 2025, நார்வேயில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் மே 26 முதல் ஜூன் 6 வரை…

7 hours ago