சிவசங்கர் பாபாவை சுஷீல் ஹரி பள்ளியில் விசாரிக்க திட்டமிட்டுள்ள சிபிசிஐடி..!

Published by
Sharmi

சிபிசிஐடி போலீசார், சிவசங்கர் பாபாவை சுஷீல் ஹரி பள்ளிக்கு அழைத்து சென்று விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், சாத்தாங்குப்பம் பகுதியில் இருக்கும் சுஷீல் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா. இவர் மீது அப்பள்ளியில் படிக்கும் சில மாணவிகள் பாலியல் புகார் அளித்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி விசாரணையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து கடந்த 16 ஆம் தேதி டெல்லியில் தலைமறைவாகியிருந்த சிவசங்கர் பாபாவை போலீசார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜராகிய சிவசங்கர் பாபாவை நீதிபதி அம்பிகா, 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவை விசாரிக்க சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். இதனையடுத்து சிபிசிஐடி போலீசார், சுஷீல் ஹரி இன்டர்நேஷனல் பள்ளிக்கே சிவசங்கர் பாபாவை அழைத்து சென்று விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இது குறித்து உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை செய்த பின்னர், இன்று அல்லது நாளை இவரை பள்ளிக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Published by
Sharmi

Recent Posts

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

5 minutes ago

சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?

சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…

44 minutes ago

CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

2 hours ago

ரசிகர்கள் ஷாக்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரோஹித் சர்மா.!

மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…

3 hours ago

”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…

4 hours ago

KKR vs CSK : வெற்றி பெருமா சென்னை.? பிளே ஆஃப் வாய்ப்பை பெருமா கொல்கத்தா.? டாஸ் விவரம் இதோ.!

கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…

4 hours ago