தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்!

The Chennai Meteorological Department has forecast heavy rains in 18 districts in Tamil Nadu, including Chennai, for the next four days.

தமிழகத்தில் சென்னை உட்பட 18 மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தொடர்ச்சியாக பல பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் மேலும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சை மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்வதற்க்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே சென்னையில் இன்று காலை இடியுடன் கூடிய கனமழை பெய்து வரும் நிலையில், நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், சென்னை, செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.