கள்ள காதலனை தீர்த்துக்கட்ட கணவன் உதவியை நாடிய பெண்! திடுக்கிடும் தகவல்கள்!

Published by
மணிகண்டன்
  • சென்னையை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் கடந்த மாதம் 18ஆம் தேதி முதல் காணாமல் போயிருந்தார்.
  • இவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சிவகுமார் மாதேஸ்வரி தம்பதியினரால் கொலை செய்யப்பட்டது பின்னர் தெரியவந்தது.

சென்னை அனகாபுரத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் கடந்த மாதம் 18ஆம் தேதி முதல் காணாமல் போயிருந்தார். இது குறித்து கார்த்திக்கின் உறவினார்கள் போலீசில் புகாரளித்தனர். போலிஸ் விசாரணையில் ஆந்திர மாநிலம் சித்தூர் பக்கம் கார்த்திகேயனின் செல் போன் அணைக்கப்பட்டது தெரியவந்தது. அதனை தொடர்ந்து போலீஸ் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

அதில் பல திடுக் தகவல்கள் வெளியாகின. அதாவது ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த சிவகுமார் – மாதேஸ்வரி தம்பதி சென்னையில் சில காலங்கள் வசித்து வந்துள்ளனர். அப்போது, மாதேஸ்வரிக்கும், கார்த்திகேயனுக்கு தவறான பழக்க வழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனை அறிந்து சிவகுமார், தனது மனைவி மாதேஸ்வரியை அழைத்து கொண்டு சித்தூர் சென்றுவிட்டார். இருந்தாலும் கார்த்திகேயன் தொடர்ந்து மாதேஸ்வரிக்கு தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனால், கார்த்திகேயனை கொலை செய்ய திட்டமிட்ட மாதேஸ்வரி, அதற்கு தன் கணவனிடம் ஒரு பொய் கூறியுள்ளார்.

அதாவது, மாதேஸ்வரி, தான் குளிக்கும் புகைப்படத்தை தானே வீடியோ எடுத்து, அதனை தன் கணவர் சிவகுமாரிடம் காட்டி, இந்த வீடியோ கொண்டு கார்த்திகேயன் என்னை மிரட்டி வருகிறார் என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிவகுமார், தன் மனைவி மூலமாக கார்த்திகேயனை வரவழைத்து, அவரை கொலை செய்துவிட்டு தன் வீட்டு பின்புறமே புதைத்துவிட்டனர்.

இது போன்ற தவறான பழக்கவழக்கம் கொண்டவர்களுக்கு மட்டும் இது பாதிக்காது. அவரை சுற்றி உள்ளவர்களையும் பாதிக்கும் என்பதை சற்று புரிந்து கொள்ள வேண்டும்.இந்த சம்பவம் தவறான பழக்கவழக்கம் கொண்டவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும்.

Published by
மணிகண்டன்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

14 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

15 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

16 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

17 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

19 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

20 hours ago