ரூ.6.64 லட்சம் கோடி… முதலீட்டாளர்கள் மாநாடு மிகப்பெரிய வெற்றி – முதலமைச்சர் உரை!

Published by
பாலா கலியமூர்த்தி

சென்னை நந்தம்பாக்கத்தில் இரண்டாவது நாள் இன்று உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிறைவு விழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் பல்வேறு நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில், புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

இதன்பின், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு வருகை தனது சிறை விருந்தினர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. இதையடுத்து, நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, தமிழ்நாட்டின் அடுத்த 20 ஆண்டுகால வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது.

இமாலய சாதனை செய்துள்ள அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவிற்கு வாழ்த்துகள். உலகமே வியக்கும் வகையில் சென்னையில் இரண்டு நாள் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி என் இதயத்தில் நீங்கா இடம் பிடித்துவிட்டார் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா. இந்த இரண்டு ஆண்டுகளில் 44 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளேன், 27 தொழிற்சாலைகளை திறந்து வைத்துள்ளேன்.

புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல்!

தற்போது தமிழக தொழிற் வளர்ச்சியில் பெரும் பாய்ச்சலாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு அமையும். இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ரூ.6.64 லட்சம் (6,64,180) கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 14.54 லட்சம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பை சேர்த்து மொத்தமாக, 26.90 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்தார்.

மேலும் கூறியதாவது, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் எதிர்பார்த்ததை விட அதிக முதலீடு கிடைத்துள்ளது. சென்னையில் நடந்த 2 நாள் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மகத்துவம் என்னென்றும் பேசப்படும். முதலீடுகள் செயல்வடிவம் பெறுவதை தொடர்ந்து கண்காணிப்பேன். ஸ்டார்ட் அப் துறையில் 200க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.

தமிழக அரசின் இலக்கை எட்ட இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் துணை நிற்கும். முதலீடுகளை ஈர்ப்பது மூலம் வளர்ச்சியை துரிதப்படுத்த முடியும். ஏற்றுமதி துறையில் தமிழகம் போட்டியிடும் திறம் மேலும் அதிகரிக்கும். மாணவர்கள் அதிகளவில் இந்த மாநாட்டை பார்வையிட்டுள்ளனர். உலக அளவில் முதலீட்டுக்கு சிறந்த இடம் தமிழ்நாடு தான்.

இதனால், உலக முதலீட்டாளர்கள் மாநாடு மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. தொழில்துறை அமைச்சர் தலைமையில் சிறப்புக்குழு அமைக்கப்படும். ஒப்பந்தங்களை செயல்படுத்தும் நோக்கில் இந்த சிறப்பு குழு செயல்படும் என்றும் முதலீடுகளை செய்ய உறுதியளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.

Recent Posts

ராஜஸ்தான் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி.!

ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…

7 hours ago

GT 4 கார் Race: ரேஸின்போது கார் டயர் வெடித்து விபத்து.! அஜித்துக்கு என்னாச்சு?

நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…

8 hours ago

RR vs PBKS : அதிரடி காட்டிய நேஹல் – ஷஷாங்க்.., மிரண்டு போன ராஜஸ்தான்.! டார்கெட் இது தான்.!

ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…

9 hours ago

சாத்தான்குளத்தில் கிணற்றில் கார் கவிழ்ந்து விபத்து…, 20 சவரன் நகைகள் மீட்பு.!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…

9 hours ago

தஞ்சையில் நாட்டு வெடி குடோனில் வெடிவிபத்து – 2 பேர் உயிரிழப்பு .!

ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…

13 hours ago

“சாலையோர கிணறுகளை ஆய்வு செய்க” – அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு.!

சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…

13 hours ago