தஞ்சையில் புதிய நலத்திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

Published by
லீனா

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தஞ்சாவூரில், ரூ.894 கோடியில் 134 திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தஞ்சாவூரில், ரூ.894 கோடியில் 134 திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். 98.77 கோடியில் நிறைவுற்ற 90 பணிகளையும் தொடங்கி வைத்தார்.

அதன் பின் இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ராஜராஜ சோழனோடு தஞ்சை மண்ணையும் பெருமைப்படுத்தியது திமுக அரசு. காவிரி நடுவர் மன்றத்தை அமைக்க வைத்தவரும் கலைஞர் தான், தமிழ்நாட்டுக்கு எவ்வளவு காவிரி நீர் வழங்க வேண்டும் என்பதை நிர்ணயித்து அறிவிக்கச் செய்தவரும் கலைஞர் தான் என தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பயனாளிகளில் 5000 பேர் மட்டுமே நிகழ்ச்சிக்கு வரவழைக்கப்பட்டனர். எஞ்சிய பயனாளிகளுக்கு ஓரிரு நாளில் வீடுதேடி நலத்திட்ட உதவிகள் வரும். தமிழகத்தில் தற்போது அங்கே தலை தூக்க தொடங்கியுள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், தமிழக அரசின் நடவடிக்கையால் இந்த ஆண்டு குறுவை சாகுபடி சாதனை படைத்துள்ளது. மேலும் நிதி நெருக்கடி இருந்தபோதிலும், ரூ.83 கோடி செலவில் நெல் கொள்முதல் நிலைய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது.

நெல் கொள்முதல் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு ஒரு மூட்டை காணக்கூடிய ரூ 3.25 லிருந்து ரூ.10 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நெல் சாகுபடி பரப்பு 3.12 லட்சம் ஏக்கரில் இருந்து 3.42 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். தமிழகத்தில் நெல் சாகுபடி பரப்பை அதிகரிப்பதில், இந்த ஆறு மாதகாலத்தில் அரசு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது என தெரிவித்துள்ளார்.

Recent Posts

அறிமுக டெஸ்ட் போட்டியில் ஏமாற்றம்.., எதிர்பார்ப்புக்கு மத்தியில் டக் அவுட்டான சாய் சுதர்சன்.!

அறிமுக டெஸ்ட் போட்டியில் ஏமாற்றம்.., எதிர்பார்ப்புக்கு மத்தியில் டக் அவுட்டான சாய் சுதர்சன்.!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.…

6 hours ago

இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?

ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…

7 hours ago

ஓய்ந்தது மழை.? ஜூன் 22 வரை அதிகரிக்கும் வெயில்.., வானிலை மையம் எச்சரிக்கை.!

சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…

7 hours ago

தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!

சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…

8 hours ago

”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!

மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…

8 hours ago

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அணி பந்து வீச்சு.., சாய் சுதர்சன் அறிமுகம்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…

9 hours ago