கொரோனா காலத்தில் உரிய நேரத்தில் நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல கூடுதலாக 118 அவசர ஊர்தி வாகனங்களின் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்.
தமிழகத்தில் கொரோனா நோயாளிகளை அழைத்துச்செல்ல கூடுதலாக 118 ஆம்புலன்ஸ் வாகனங்களின் சேவையை சென்னை தலைமைச் செயலகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி. ஏற்கனவே, கொரோனா காலத்தில் செயல்பட 1005 ஆம்புலன்ஸுகள் தங்குதடையின்றி கட்டணமில்லாமல் இயங்கி வந்த நிலையில், தற்போது கூடுதலாக நவீன வசதியுடன் கூடிய 118 ஆம்புலன்ஸ் வாகனங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த 118 ஆம்புலன்ஸ் வாகனங்களின் சேவையை முதல்வர் பழனிசாமி தொடங்கிவைத்த பின்னர், ஆம்புலன்ஸ்-க்குள் ஏறி செயல்பாட்டை ஆய்வு செய்தார்.
இவருடன் சேர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் ஆய்வு மேற்கொண்டார். வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணியருக்கு நோய்த்தொற்று கண்டறிந்து, கட்டுப்படுத்தும் நோக்கில் அனைத்து விமான நிலையங்களிலும் 108 அவசர கால ஊர்திகள் தயார் நிலையில் உள்ளது. இந்த வாகனங்களில் செயற்கை சுவாச கருவி, பல்ஸ் மீட்டர் மற்றும் வெண்டிலேட்டர் போன்ற உயர் சிகிச்சை கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
இவற்றை கையாள அவசரகால மேலாண்மை தேர்ச்சி பெற்ற பணியாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். உயிர்காக்கும் உன்னதமான இச்சேவையை விரிவுபடுத்தவும், மக்களுக்கு விரைவாக உதவி கிடைத்திடும் விதமாகவும் முதல்வர் 103 கோடியே 50 லட்சம் மதிப்பில் 500 புதிய அவசரகால ஊர்திகளை 108 ஆம்புலன்ஸ் சேவையில் இணைத்து வைக்கிறார்கள். முதல்கட்டமாக இன்று 118 எண்ணிக்கையில், 108 ஆம்புலன்ஸிகளை முதல்வர் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…