#Breaking: ஆளுனருடன் முதல்வர் பழனிசாமியின் சந்திப்பு திடீர் ரத்து!

As Chief Minister Palanisamy was scheduled to meet Governor Banwarilal Purohit this evening, the meeting was abruptly canceled.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் பழனிசாமி இன்று மாலை சந்திக்கவிருந்த நிலையில், திடீரென அந்த சந்திப்பு ரத்தானது.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்யக்கோரி தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வரும் நிலையில், 7 பேர் விடுதலைக்கு ஒப்புதல் கேட்டு ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இதற்கு ஆளுநர் காத்து வருவதால், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று மாலை 5 மணிக்கு சந்தித்து பேசவிருந்தார்.

இந்த பேச்சுவார்த்தையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், நிவார் புயல் குறித்தும், 7 பேர் விடுதலை குறித்தும் ஆலோசிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடனான இந்த சந்திப்பு, திடீரென ரத்தானது.