தலைமை செயலாளர் இறையன்புக்கு தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல்.
பிப்ரவரி மாதத்துடன் தலைமைச் செயலாளர் இறையன்பு விருப்ப ஓய்வு பெற்று, மாநில தலைமை தகவல் ஆணையராக பதவியேற்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பல்வேறு துறை அதிகாரிகள் மாற்றம், புதிய அதிகாரிகள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, தி.மு.க. ஆட்சிக்கு வந்த 2021-ம் ஆண்டு மே மாதம் முதல் தமிழக அரசின் தலைமை செயலாளராக இறையன்பு நியமிக்கப்பட்டு, பதவி வகித்து வருகிறார்.
unknown nodeதலைமை செயலாளராக செயல்பட்டு வரும் இறையன்பு, நேர்மையானவர், எளிமையானவர், எழுத்தாளர் மற்றும் பேச்சாளர் என அனைவராலும் பாராட்டப்படக்கூடியவர். இவரின் பதவிக்காலம் வருகிற ஜூன் மாதம் வரை உள்ளது. ஆனாலும், வரும் 28ம் தேதியுடன் தலைமை செயலாளர் பதவியில் இருந்து இறையன்பு விருப்ப ஓய்வுபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்பின் மார்ச் 1ம் தேதியில் இருந்து தலைமை செயலாளர் பதவிக்கு நிகரான அதிகாரம் கொண்ட தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையர் பதவி இறையன்புக்கு வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.