12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து விரைவில் முடிவு..!

12-ம் வகுப்பைப் பொருதத்தவரை நடப்பு கல்வியாண்டில் பூஜ்யம் ஆண்டாக அறிவிக்க வாய்ப்பு இல்லை
சென்னை தலைமைச் செயலகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடர்ந்து 2 நாள்கள் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும். தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பதே பெற்றோர், ஆசிரியர் மற்றும் கல்வியாளர்களின் ஒருமித்த கருத்து என தெரிவித்தார்.
இந்நிலையில், 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 12-ம் வகுப்பைப் பொருதத்தவரை நடப்பு கல்வியாண்டில் பூஜ்யம் ஆண்டாக அறிவிக்க வாய்ப்பு இல்லை. தனியார் பள்ளிகளில் ஓடாத பஸ், போடாத சீருடைக்கு கட்டணம் வசூல் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், ஒத்திவைக்கப்பட்டுள்ள +2 பொதுத் தேர்வை ஜுலையில் நடத்த அரசு திட்டமிட்டுள்ளதாகவும், ஜூன் மாத இறுதிக்குள் Unit Test & Revision Test-ஐ வாட்ஸ்அப் வழியாக நடத்தி முடிக்குமாறு அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025