தமிழகத்திற்கு பாஜக ஒரு செங்கலை தாண்டி ஒன்றுமே செய்யவில்லை… முதல்வர் காட்டம்.!

Published by
மணிகண்டன்

MK Stalin : கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு பாஜக, ஒரு செங்கலை தாண்டி வேறு ஒன்றும் செய்யவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், தேர்தல் பிரச்சார வேலைகளில் அரசியல் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் நான் அனைவரும் வெகு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலை நடத்தும் பணிகளிலும் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். அதில். பாஜக அரசு பற்றியும், பிரதமர் மோடி பற்றியும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து உள்ளார். அவர் கூறுகையில், டிசம்பர் மாதத்தில் தமிழகத்தில் சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், தென் தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளம் பாதிப்புகள் ஏற்பட்டது.

அதற்கு உரிய நிவாரண நிதியை நாங்கள் மத்திய அரசிடம் கோரினோம். ஆனால், அவர்கள், தற்போது வரை அதனை தரவில்லை. இதனால் நீதிமன்ற வரை சென்றுள்ளோம் என குறிப்பிட்டார். மேலும், மாநில கூட்டாட்சி, ஜனநாயகம் என்று பேசும் இவர்கள் கடைசியாக எப்போது முதலமைச்சர் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார்கள் என்று கூறுங்கள் என்று வினாவினார்.

10 வருடங்களாக வாய் திறக்காத பிரதமர் மோடி, தற்போது கச்சத்தீவு விவகாரத்தில் கையில் எடுத்து இருக்கிறார். கச்சத்தீவு விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது. கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் தமிழகத்திற்கு மதுரை எய்ம்ஸில் ஒரு செங்கலை தவிர வேறு எதுவும் செய்யவில்லை என்றும் தனது விமர்சனங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்வைத்துள்ளர்.

Recent Posts

ரோஹித் – கோலி ஓய்வு பெற அழுத்தம் கொடுக்கப்பட்டதா? விளக்கம் கொடுத்த பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட்டின் மிகப் பெரிய நட்சத்திரங்களான ரோஹித் ஷர்மாவும், விராட் கோலியும் 2025 மே மாதத்தில் டெஸ்ட்…

16 minutes ago

யூடியூப் புதிய விதிகள் : தரமற்ற வீடியோக்களுக்கு இனி காசு இல்லை!

யூடியூப் உலகம் முழுக்க 200 கோடிக்கும் மேற்பட்ட மக்களால் பயன்படுத்தப்படும் ஒரு பிரம்மாண்ட மேடையாக இருந்து வருகிறது.  இதில் பலர்…

1 hour ago

’பென்ஸ்’ பட ஒளிப்பதிவாளரை திருமணம் செய்யப்போகும் நடிகை தான்யா!

சென்னை : நடிகை தன்யா ரவிச்சந்திரனுக்கும், ‘பென்ஸ்’ திரைப்பட ஒளிப்பதிவாளர் கௌதம் ஜார்ஜுக்கும் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நடைபெற்றது. ஜூலை…

2 hours ago

த.வெ.கவின் அடுத்த டார்கெட்…கோலாகலமாக நடந்த 2வது மாநாடு பந்தக்கால் நடும் விழா!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது. இந்த…

3 hours ago

நிமிஷா பிரியா வழக்கு : “ஒரு மனித உயிரைக் காப்பாற்றுவதற்கான முயற்சி” – ஏ.பி.அபூபக்கர்!

டெல்லி : கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, யேமனில் 2017-ம் ஆண்டு தலால் அப்தோ மஹ்தி என்பவரைக் கொலை…

3 hours ago

நாளை 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…இன்று 2 மாவட்டத்துக்கு எச்சரிக்கை!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூலை 16 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும்…

3 hours ago