தமிழகத்திற்கு பாஜக ஒரு செங்கலை தாண்டி ஒன்றுமே செய்யவில்லை… முதல்வர் காட்டம்.!

Published by
மணிகண்டன்

MK Stalin : கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு பாஜக, ஒரு செங்கலை தாண்டி வேறு ஒன்றும் செய்யவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், தேர்தல் பிரச்சார வேலைகளில் அரசியல் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் நான் அனைவரும் வெகு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலை நடத்தும் பணிகளிலும் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். அதில். பாஜக அரசு பற்றியும், பிரதமர் மோடி பற்றியும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து உள்ளார். அவர் கூறுகையில், டிசம்பர் மாதத்தில் தமிழகத்தில் சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், தென் தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளம் பாதிப்புகள் ஏற்பட்டது.

அதற்கு உரிய நிவாரண நிதியை நாங்கள் மத்திய அரசிடம் கோரினோம். ஆனால், அவர்கள், தற்போது வரை அதனை தரவில்லை. இதனால் நீதிமன்ற வரை சென்றுள்ளோம் என குறிப்பிட்டார். மேலும், மாநில கூட்டாட்சி, ஜனநாயகம் என்று பேசும் இவர்கள் கடைசியாக எப்போது முதலமைச்சர் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார்கள் என்று கூறுங்கள் என்று வினாவினார்.

10 வருடங்களாக வாய் திறக்காத பிரதமர் மோடி, தற்போது கச்சத்தீவு விவகாரத்தில் கையில் எடுத்து இருக்கிறார். கச்சத்தீவு விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது. கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் தமிழகத்திற்கு மதுரை எய்ம்ஸில் ஒரு செங்கலை தவிர வேறு எதுவும் செய்யவில்லை என்றும் தனது விமர்சனங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்வைத்துள்ளர்.

Recent Posts

“இனப்படுகொலை” நடக்கிறது…தென்னாப்பிரிக்க அதிபரை அதிர வைத்த டிரம்ப்!

வாஷிங்டன் : அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவை 2025 மே…

3 hours ago

நாடு முழுவதும் புனரமைக்கப்பட்ட 103 ரயில் நிலையங்கள்… திறந்து வைக்கும் பிரதமர் மோடி!

சென்னை : பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 22, 2025) ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் இருந்து காணொலி வாயிலாக…

3 hours ago

தஞ்சை : நேருக்கு நேர் மோதி கோர விபத்து… பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

தஞ்சாவூர் : மாவட்டம், செங்கிப்பட்டி பகுதியில் உள்ள நாகப்பட்டினம்-திருச்சி நெடுஞ்சாலையில் மே 21, 2025 அன்று இரவு 8 மணியளவில்…

4 hours ago

என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் தலைவர் பசவராஜு! நடந்தது என்ன?

சத்தீஸ்கர்: மாநிலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவர் நம்பல கேசவ் ராவ் என்ற பசவராஜு உட்பட 27 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு…

5 hours ago

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கா? வானிலை மையம் கொடுத்த தகவல்!

சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான…

5 hours ago

பிளே ஆப் சென்ற மும்பை….. டெல்லியை வீழ்த்தியதற்கு முக்கிய காரணங்கள் இதுதான்!

மும்பை : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், டெல்லி அணியும் மோதியது. முதலில் பேட்டிங் செய்த மும்பை…

6 hours ago