வெற்றி தவறினால் அமைச்சர் பதவி பறிப்பு.? முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை.!

Published by
மணிகண்டன்

நாடாளுமன்ற தேர்தல் தேதி அடுத்த மாத இறுதியில் அறிவிக்கப்படும் என்றும், தேர்தல் ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் என்றும் கூறப்பட்டு வருகிறது . தேர்தல் நிர்வாக வேலைகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம், மாநில தேர்தல் ஆணையங்கள் ஆரம்பித்து செயல்படுத்தி வருகின்றன. அதே போல பிரதான தேசிய கட்சிகள் முதல் மாநில கட்சிகள் வரையில் தேர்தல் பிரச்சாரம், கூட்டணி என தற்போதே தேர்தல் வேலைகளில் களமிறங்கி உள்ளன.

அதிமுக தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோவாக அமையும்- ஜெயக்குமார் பேட்டி .

இன்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது பற்றி ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக அமைச்சர்கள், திமுக மாவட்ட செயலாளர்களாகவும் கட்சி பொறுப்பில் இருக்கின்றனர்.

இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், வரும் நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் பெரிய நாம் வெற்றி பெற வேண்டியது கட்டாயம் என்று குறிப்பிட்டார். இந்த தேர்தல் மிக் முக்கியமான தேர்தல் என்றும் கூறியுள்ளார்.

திமுக தலைமையில் இருந்து தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.  உங்கள் தொகுதியில் ஏதேனும் பிரச்சனை என்றால் உடனடியாக ஒருங்கிணைப்பு குழுவிடம் கூறுங்கள். அவர்கள் மூலம் உடனடியாக சரி செய்து விடுங்கள் என மாவட்ட செயலாளர்களுக்கு (அமைச்சர்கள்) முதல்வர் வேண்டுகோள் வைத்துள்ளார்.

மேலும், கட்சி தொண்டர்களையும், கூட்டணி கட்சியினரையும் ஒரு சேர அரவணைத்து சென்று வெற்றியை அறுவடை செய்ய வேண்டும் என முதல்வர் கூறினார். மேலும் , ஒருவேளை வெற்றியை மாவட்ட செயலாளர்கள் தவறவிட்டுவிட்டால் அந்த தொகுதிக்கு பொறுப்பாக இருப்பவரின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என எச்சரித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு முன்னர் நாடாளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனை நடைபெற்ற போதும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இதே போன்று ,40  தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். தவறினால் மாவட்ட செயலாளர் பொறுப்பு பறிக்கப்படும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடதகைது.

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

40 minutes ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

45 minutes ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

1 hour ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

3 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

3 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

4 hours ago