மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது..!

The consultation for medical study in Tamil Nadu started at Omanthurai Multipurpose Hospital

தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் தொடங்கியது.

தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் தொடங்கியது. அரசு மருத்துவக்கல்லூரியில் 4,349 இடங்கள், சுயநிதி கல்லூரிகளில் 2,650 இடங்கள் என மொத்தம் 6,999 இடங்கள் நிரப்ப கலந்தாய்வு நடைபெறுகிறது.

இன்று சிறப்பு பிரிவு, மாற்றுத்திறனாளிகள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் வாரிசுகள் கலந்தாய்வு நடைபெறுகிறது. நாளை மற்றும் நாளை மறுநாள் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களை 7.5 சதவீத ஒதுக்கீட்டுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜனவரி 30-ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளது.

கொரோனா பரவலை கருத்தில்கொண்டு ஆன்லைன் முறையில் பொதுப் பிரிவினருக்கான மருத்துவப்படிப்பு கலந்தாய்வு நடைபெறுகிறது.