தொடரும் இழுபறி: காங்கிரஸில் 4, பாஜகவில் 3 – இன்று வெளியாக வாய்ப்பு.!

Published by
பாலா கலியமூர்த்தி

வேட்பாளர் பட்டியல் அறிவிப்பில் நீடித்து வரும் இழுபறி, காங்கிரஸ், பாஜக போட்டியிடும் மீதமுள்ள வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்பு.

அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், நேற்று 17 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது. இதில் தாராபுரம் (தனி ) – எல்.முருகன், கோவை தெற்கு – வானதி சீனிவாசன், காரைக்குடி – ஹெச்.ராஜா, அரவக்குறிச்சி – அண்ணாமலை, நாகர்கோவில் -எம்.ஆர்.காந்தி, ஆயிரம் விளக்கு -குஷ்பு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் துறைமுகம் – வினோஜ் பி.செல்வம், திருவண்ணாமலை – தணிகைவேல், மொடக்குறிச்சி – சி.கே.சரஸ்வதி, திட்டக்குடி – பெரியசாமி, திருவையாறு – பூண்டி வெங்கடேசன், மதுரை வடக்கு – சரவணன், குளச்சல் -பி.ரமேஷ், திருநெல்வேலி – நயினார் நாகேந்திரன், ராமநாதபுரம் -டி.குப்புராமு, விருதுநகர் – பாண்டுரங்கன், திருக்கோவிலூர் – வி.ஏ.டி.கலிவரதன் உள்ளிட்டவர்களும் போட்டியிடுகின்றனர்.

இதுபோன்று மறுபக்கம் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை மட்டும்தான் காங்கிரஸ் வெளியிடப்பட்டுள்ளது. இதில் விளவங்கோடு, குளச்சல், மயிலாடுதுறை, வேளச்சேரி தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கவில்லை. ஏனென்றால், வேட்பாளர் அறிவிப்பில் சிலருக்கு அதிருப்தி இருப்பதால், சில இடங்களில் எதிர்ப்பு தெரிவித்து வேறு கட்சியில் இணைந்து வருகிறார்கள்.

அந்த வகையில் நேற்று காலை பாஜகவில் இணைந்த திமுக எம்எல்ஏ சரவணனுக்கு உடனடியாக சீட் வழங்கப்பட்டது. இருப்பினும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை எதிர்பார்த்து பாஜக காத்திருப்பதாக கூறப்படுகிறது. காங்கிரஸில் வேட்பாளர் அறிவிப்பில் சில பிரச்சனை நிலவி வருகிறது. ஆகையால், காங்கிரஸில் 4, பாஜகவில் 3 என மீதமுள்ள தொகுதிகளில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்க இழுபறி நீடித்து வரும் நிலையில், இன்று வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

2 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

3 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

4 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

4 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

6 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

8 hours ago