சென்னையில் இதுவரை இல்லாத பதிப்பாக 1,146 பேருக்கு கொரோனா.!

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,146 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 20,993 ஆக உயர்ந்தது என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் இன்று ஒரே நாளில் 1,116 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 20,993 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் 197 பேர் உயிரிழந்துள்ள நிலையில்,10,572 பேர் வீடு திரும்பியுள்ளனர். மேலும், 10,223 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று புதிதாய் 1,458 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 30,152 ஆக உயர்ந்துள்ளது. இன்று 19 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 251 ஆக அதிகரித்தது. மேலும், கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 16,395 ஆக அதிகரித்தது.