கொரோனா வராமல் தடுக்கும் உணவுப்பழக்கங்கள் குறித்து சீமான்,செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம்,நடிகர் விவேக் இறப்பு குறித்து சமீபத்தில் செய்தியாளர்கள் கேள்வி கேட்டுள்ளனர்.இதனையடுத்து,சீமான் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் கூறுகையில்,”நடிகர் விவேக் மிகவும் அன்பானவர்,நான் விசாரித்த வரையில் விவேக்கின் மரணத்திற்கு தடுப்பூசி காரணம் அல்ல.விவேக்கிற்கு ஏற்கனவே அடைப்பு இருந்துள்ளது”,என்று கூறினார்.
மேலும்,”நோய் தொற்று அதிகரித்து வருவதற்கேற்ப நாம் வசதிகளை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.இது அரசு அல்லது மருத்துவர்களின் கடமை என்று நினைக்காமல் நம் ஒவ்வொருவரின் கடமை என்று நினைக்க வேண்டும்.அதுமட்டுமல்லாமல்,மக்கள் அனைவரும் கருஞ்சீரகத்தைப் பயன்படுத்துங்கள்,மிளகினை புழுங்கல் அரிசியோடு சேர்த்து மென்று விழுங்குங்கள்.தினமும் 3 வேளை இவ்வாறு செய்தால் கொரோனா போன்ற எந்த நோய்த் தொற்றும் உடம்புக்குள் செல்லாது.இதை செய்வதால்தான் நானும் கொரோனாவிலிருந்து தப்பித்து உள்ளேன்.
கொரோனா பரவலை தடுக்க வெந்நீர் அதிகமாக குடியுங்கள்.மேலும் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கும் நம் பாரம்பரிய உணவுகளான நாட்டுக்கோழிச் சாறு,மிளகு ரசம் குடியுங்கள்.மேலும்,தொடர்ந்து முட்டை,காய்கறி மற்றும் பழங்கள் போன்ற இயற்கை உணவுகளை உண்டு பாதுகாப்பாக இருங்கள்”,என்று கூறியுள்ளார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…