ஆர்.எஸ் பாரதி மீதான அவதூறு வழக்குக்கு தடை..!

Default Image

ஆர்.எஸ் பாரதி மீதான அவதூறு வழக்கிற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி மீதான அவதூறு வழக்கிற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக ஆர்.எஸ் பாரதி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

எம்.பி எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஆர்.எஸ் பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். முதல்வர் செய்ய வேண்டிய மக்கள் பணி குறித்து பேசியதாகவும் தனிப்பட்ட ரீதியில் விமர்சிக்கவில்லை என ஆர்.எஸ் பாரதி தரப்பில் வாதம் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, ஆர்.எஸ் பாரதி நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்தும், விசாரணைக்கு தடை விதித்தும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 05052025
Kahmir person jumped into river and died
DMK MP A Rasa stage collapse
NEET exam 2025
India Pakistan - Postal Services