துக்ளக் குருமூர்த்தி மன்னிப்பு கோர டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு!

துக்ளக் குருமூர்த்தி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் ஆணை.

thuglak gurumurthy

துக்ளக் குருமூர்த்தி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் ஆணை.

டெல்லி உயர்நீதிமன்றம் வழக்கறிஞர்கள் சங்கம் தொடர்ந்த அவமதிப்பு வழக்கில்  துக்ளக் குருமூர்த்தி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த முரளிதரருக்கு எதிராக குருமூர்த்தி பதிவிட்டிருந்ததாக கூறப்பட்டது. பின்னர் இந்த பதிவும் நீக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் சங்கம் கிரிமினல் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.

இதுதொடர்பாக துக்ளக் குருமூர்த்தி ஏற்கனவே மன்னிப்பு கோரியுள்ளார், தனது பதிவையும் நீக்கிவிட்டார் என அவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இன்று வாதிட்ட நிலையில், குருமூர்த்தி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.