பரபரப்பு.!அதிமுக வெற்றிப் பெற்றதைக் கண்டித்து திமுகவினர் தர்ணா.!

Published by
murugan
  • பல்வேறு காரணங்களுக்காக நிறுத்தப்பட்ட 335 பதவிக்கான மறைமுக தேர்தல்  இன்று நடைபெறுகிறது.
  • தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி ஒன்றியத் தலைவர் தேர்தலில் அதிமுக வெற்றிப் பெற்றதைக் கண்டித்து திமுகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த ஆண்டு டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.இதன் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இதனைத்தொடர்ந்து கடந்த ஜனவரி 11-ஆம் தேதி மாவட்ட ஊராட்சி தலைவர், ஒன்றிய தலைவர், ஊராட்சி துணைத்தலைவர் ,மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர், ஒன்றிய துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது.

ஆனால் பல்வேறு காரணங்களுக்காக 335 பதவிக்கான மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. பின்பு மாநில தேர்தல் ஆணையம் நிறுத்தப்பட்ட மறைமுக தேர்தல் இன்று நடைபெறும் என்று அறிவித்தது.இதைத்தொடர்ந்து இன்று மறைமுக தேர்தல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி ஒன்றியத் தலைவர் தேர்தலில் மொத்தமாக 19 வாக்குகள் அதில் அதிமுக 10 வாக்குகளும் , திமுக 09 வாக்குகளும் பெற்றதாக கூறி அதிமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அதிமுக வெற்றிப் பெற்றதைக் கண்டித்து திமுகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.இந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் 8 இடங்களிலும் ,அதன் கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1 இடங்களும் பெற்றனர்.அதிமுக சார்பில் 5 இடங்களும் ,கூட்டணி கட்சியான தேமுதிக 1 இடங்களையும் பெற்றனர்.

இவர்கள் இல்லாமல் சுயேட்ச்சை வேட்பாளர்கள் 4 பேர் வெற்றி பெற்று இருந்தனர்.இந்த சுயேட்ச்சை வேட்பாளர்களின் ஆதரவு அதிமுக, திமுகவிற்கு  சரி சமமான நிலையில் விடுதலை சிறுத்தை கட்சியை சார்ந்த ஒரு நபர் திமுக சார்பில் போட்டியிட்டு இருந்தார் அவர் இன்று அதிமுகவிற்கு ஆதரவாக வாக்களித்ததாக  காலை கூறப்பட்டது.

இதைத்தொடர்ந்து அப்போது வாக்கு எண்ணிக்கை திமுக 10 எனவும் ,அதிமுக 9 எனவும் இருந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் உள்ளே சென்று தேர்தல் நடந்த பிறகு மொத்தம் உள்ள 19 வாக்குகள் அதிமுக 10 வாக்குகளும்  , திமுக 09 வாக்குகளும் பெற்றதாக கூறி அதிமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து தூத்துக்குடி எம்.பி கனிமொழி தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.பின்னர் திமுக கட்சியினருடம் சாலையில் எம்.பி கனிமொழி  தர்ணாவில் ஈடுபட்டார்.

Published by
murugan

Recent Posts

ஹர்திக் மட்டும் இல்லனா கோப்பை வந்திருக்காது! கேப்டன் ரோஹித் சர்மா ஓபன் டாக்!

ஹர்திக் மட்டும் இல்லனா கோப்பை வந்திருக்காது! கேப்டன் ரோஹித் சர்மா ஓபன் டாக்!

டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…

35 minutes ago

சிதம்பரம் அருகே கொடூரம்…காதல் விவகாரத்தில் மகளையே கொன்ற தந்தை!

கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…

1 hour ago

தண்ணீர் கலந்த டீசல்…நடுவழியில் நின்ற ம.பி. முதல்வர் கான்வாய் வாகனங்கள்!

மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…

2 hours ago

யாருடனும் தொடர்பு இல்லை ப்ளீஸ் கொடுங்க..ஜாமீன் கேட்கும் நடிகர் கிருஷ்ணா!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…

2 hours ago

இஸ்ரேல் போட்ட ஸ்கெட்சில் இருந்து ஈரான் தலைவர் காமெனி தப்பியது எப்படி? வெளியான சீக்ரெட்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…

3 hours ago

தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளிலும் ‘வாட்டர் பெல்’ திட்டம் கொண்டு வருவோம்! அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

சென்னை : தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தவறாமல் தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும் ‘வாட்டர் பெல்’ திட்டம்…

4 hours ago