தேர்தல் நேரம் மட்டுமல்ல. எப்போதும் மக்களுடன் இணைந்து இருக்கும் பேரியக்கம் திமுக.
தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. இது குறித்து தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில், தற்போது பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், தேர்தல் நேரம் மட்டுமல்ல. எப்போதும் மக்களுடன் இணைந்து இருக்கும் பேரியக்கம் திமுக. கொரோனா சமயங்களில் மக்களுக்கு ஒன்றிணைவோம் வா என்னும் செயல்பாட்டின் மூலம், கட்சி பாகுபாடின்றி உணவு, மருத்துவ உதவி, அத்தியாவசிய தேவைகளை திமுக நிறைவேற்றியது.
கோடை காலத்தில் மக்களின் தாகம் தணிக்க திமுகவின் சார்பில் தண்ணீர் பந்தல் அமைத்திடுங்கள். இரண்டாவது கொரோனா அலை குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி, உங்கள் மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கல், வாய்ப்புள்ள இடங்களில் முகக்கவசம், சானிடைசர்களை வழங்குங்கள். தேர்தல் முடிவுகளில் நல்ல தீர்ப்பு நிச்சயம் வரும். எனினும் அது வரை காத்திருக்காமல் மக்களுக்கான பணியை தொடர்ந்திட ஒன்றிணைவோம் வாருங்கள் உடன்பிறப்புகளே..! என்று தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…