இன்று நடைபெற இருந்த கிராமசபைக் கூட்டங்களை ரத்து செய்ததற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
இன்று நடைபெற இருந்த கிராமசபைக் கூட்டங்களை அரசு ரத்து செய்துள்ளது.ஆனால்திட்டமிட்டபடி திமுக ஊராட்சி மன்றத் தலைவர்கள் மக்களைச் சந்திப்பார்கள் என்று கூறிய அவர் கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்ற நிலையை போல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்படுவதாக ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.மேலும் அவர் கூறுகையில் உள்கட்சிப் பிரச்சினைகளின் உச்சாணிக் கொம்பில் இருந்து கொண்டு எங்க விழுந்து விடுவோமோ என்ற சோகத்தில் இருக்கிறார். கொரோனாவில் பெரிதும் குழம்பிப் போய் நிற்கிறார் பாவம் மாவட்டம் மாவட்டமாக சென்று ஆய்வுக்கூட்டம் என்ற பெயரில் முதலமைச்சர் வேட்பாளருக்காக நாணமின்றி ஆதரவு திரட்டி வருகிறார். உள்கட்சிப் பிரச்சினையில், மீள முடியாமல் ஆழமாகச் சிக்கியுள்ளார் என்று விமர்சித்துள்ளார்.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.…
ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…
சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…
சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…
மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…