சென்னை அண்ணா அறிவாலயத்தில் மார்ச் 18ம் தேதி திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. பட்ஜெட் தாக்கல் செய்ய சட்டமன்றம் கூடவுள்ள நிலையில், மார்ச் 18ம் தேதி மாலை 5 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது என தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
மார்ச் 18ம் தேதி -ஆம் தேதி சட்டமன்ற அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் தான் வேளாண் பட்ஜெட் எப்போது தாக்கல் செய்வது குறித்து முழு தகவலும் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு முதல்முறையாக வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து 2022-23 க்கான வேளாண் தனி நிதிநிலை அறிக்கை தயாரிப்பது தொடர்பாக தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர் ஆகிய 5 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…