எதிர்பார்க்கப்பட்ட வாக்குறுதியான இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 தரவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றசாட்டு.
சென்னை எழும்பூரில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றாமல் கண்துடைப்பு வேலையை செய்து வருகிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வாக்குறுதியான இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 கொடுக்கவில்லை, மதத்தோரும் முதியவர்களுக்கு ரூ.1000 லிருந்து ரூ.1,500 அதுவும் கொடுக்கவில்லை.
கல்விக்கடன் ரத்து, சிலிண்டர் மானியம் ரூ.100 தரவில்லை என்றும் பெட்ரோல் டீசல் ரூ.5 குறைப்பதாக கூறி ரூ.3 மட்டுமே குறைத்துள்ளார்கள். நகைக்கடன் மற்றும் நீட் தேர்வு ரத்து போன்ற முக்கிய வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை. இந்த அரசு கண்துடைப்புக்காக குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
தேர்தல் வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக கூறும் திமுக, அவற்றை பட்டியலிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இதனிடையே சமீபத்தில் திமுக அளித்த வாக்குறுதியில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களைளையும், அவர்களது…
டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பேசுகையில், ''பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிப்பதே…
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் பகுதியில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட…
டெல்லி : நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் திமுக எம்.பி. ஆ.ராசா பேசுகையில், ''திமுக எப்போதும் தேச ஒற்றுமையை…
சென்னை : நெல்லை ஆணவக் கொலை "நீளும் சாதிய அருவருப்பின் அட்டூழியம்" என்று இயக்குநர் மாரி செல்வராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 2025-26 கல்வியாண்டிற்கான காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு…